பி.வாசு இயக்கத்தில் சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது.இப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது. இதில் லாரன்ஸ், வடிவேலு. ராதிகா, கங்கனா ரணாவத் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.


இப்படத்தை வரும் விநாயகர் சதுர்த்தி பண்டிகையை முன்னிட்டு செப்டம்பர் 14ஆம் தேதி வெளியிடப்பட குழு திட்டமிட்டுள்ளது என்கிறார்கள் இந்நிலையில் இப்படத்தில் இறுதி கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்து விட்டதாக நடிகர் ராதிகா சரத்குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் புகைப்படங்களுடன் பதிவிட்டு எனக்கு தங்க மோதிரத்தையும் கடிகாரத்தையும் பரிசாக கொடுக்கும் முதல் ஹீரோ லாரன்ஸ் எனக் கூறியுள்ளார்.