தலைவலி
தேவையான பொருட்கள்
1.நல்லெண்ணெய் -500 மி.லி
2.சதகுப்பை -100 கிராம்
3.கருஞ்சிரகம் -20கிராம்
4.வெள்ளை மிளகு -10 கிராம்
5.கஸ்தூரி மஞ்சள் -10கிராம்
செய்முறை
சதகுப்பை 100 கிராம் 1 லிட்டர் தண்ணீரில் போட்டு 500மி.லி யாக வற்ற காய்ச்சி வடித்துக்கொண்டு நல்லெண்ணையுடன் கலந்து கொள்ளவும்.பின் மற்ற பொருள்களையும் சேர்த்து மெழுகு பதம் அளவிற்கு காய்ச்சி வடித்துக்கொள்ளவும்.
வாரம் 2 தடவை புதன் ,சனி தலைமுழுகி வரவும்.தினசரி தலைக்கு தடவி சீவி கொள்ளலாம்.இதனை தேங்காய் எண்ணையிலும் காய்ச்சலாம்.
தீரும் நோய்கள் :
தலைநீர் பாரம் ,தலைவலி ,பீனிசம் குணமாகும்.