சாமை இட்லி: செய்முறை மற்றும் தேவையான பொருட்கள்

சாமை இட்லி

சாமை இட்லி என்பது ஒரு மிகுந்த ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கியமான தென்னிந்திய காலை உணவாகும். சாமை, ஒரு சிறுதானியம், இது இரும்பு, நார்ச்சத்து மற்றும் பல்வேறு மினரல்கள் நிறைந்தது. இது சர்க்கரை நோயாளிகள் மற்றும் எடை குறைக்க விரும்புவோருக்கு சிறந்தது. சாமை இட்லி தயாரிக்க, சாமை மாவு, உளுத்தம் பருப்பு மாவு மற்றும் தண்ணீர் கலந்து பிசைந்து, பின்னர் நீராவியில் வேகவைக்கப்படுகிறது. இது மிளகாய் சட்னி, சாம்பார் அல்லது தேங்காய் சட்னியுடன் பரிமாறப்படுகிறது. சாமை இட்லி என்பது சுவையான, ஜீரணம் செய்வதற்கு எளிதான மற்றும் ஆரோக்கியமான உணவாகும், இது குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை அனைவருக்கும் ஏற்றது.

தேவையான பொருட்கள்

சாமை அரிசி – 2கப்

உளுந்து – 1/2 கப்

அவல் – கைப்பிடி

வெந்தயம் -1 ஸ்பூன்

உப்பு- 2ஸ்பூன் அல்லது தேவையான அளவு

Saamai Idly

செய்முறை:

முதலில் சாமை அரிசியை இரண்டு அல்லது மூன்று முறை நல்ல தண்ணீரில் நன்றாக அலம்பிக் கொள்ளவும்.பின் கழுவின சாமை அரிசியை தனியாக 4-5 மணி நேரம் ஊறவைக்கவும், அவலையும் தனியாக ஊறவைக்கவும்.உளுந்தையும் வெந்தயத்தையும் ஒன்றாக ஊறவைக்கவும் (ஒரு 1/2 மணி நேரம் ஊறவைத்தால் போதும்.)

4-5 மணி நேரத்துக்குப் பிறகு அரிசியையும் அவலையும் சேர்த்து சற்று கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும். இல்லையென்றால் இட்லி மொழு மொழுவென்று இருக்கும்.

அடுத்து உளுந்தையும் வெந்தயத்தையும் தண்ணீர் கொஞ்சம் கொஞ்சமாகச் சேர்த்து புசுபுசுவென்று வருமாறு அரைக்கவும்.பிறகு அரிசி மாவையும் உளுந்து மாவையும் தேவையான அளவு உப்பு சேர்த்து ஒன்றாகக் கரைக்கவும்.

7 முதல் 8 மணி நேரம் மாவைப் புளிக்க விடவும். அல்லது இரவு படுக்கும் முன் கரைத்து வைத்தால் காலை நன்றாகப் புளித்து மாவு பொங்கி இருக்கும்.

இட்லி பாத்திரத்தில் அடியில் தண்ணீர் விட்டு இட்லி தட்டில் மாவு விட்டு 15 நிமிடங்கள் அடுப்பில் வைத்து இறக்கினால் சாமை இட்லி தயார்.

குறிப்பு :

இதில் சாமை அரிசி 2 கப்பிற்குப் பதிலாக 1 கப் சாமை அரிசியும் 1 கப் இட்லி அரிசியும் சேர்த்தும்கூட மேலே குறிப்பிட்டதுபோல் ஊறவைத்து இட்லி செய்யலாம்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top