சாமை காஞ்சிபுரம் இட்லி
தேவையான பொருட்கள்
1.சாமை அரிசி – 2 கப்
2. உளுந்து – 1 கப்
3. வெந்தயம் – 1ஸ்பூன்
4. மிளகு – 1 ஸ்பூன்
5. சீரகம் – 1ஸ்பூன்
6. கருவேப்பிலை – சிறிதளவு
7. சுக்குபொடி – 10கிராம்
8.நல்லெண்ணெய் – /நெய் – 1 கரண்டி
9.உப்பு தேவையான அளவு

செய்முறை:
முதலில் சாமை அரிசியை இரண்டு அல்லது மூன்று முறை நல்ல தண்ணீரில் நன்றாக அலம்பிக் கொள்ளவும்.பின் கழுவின சாமை அரிசியை தனியாக 4-5 மணி நேரம் ஊறவைக்கவும். அவலையும் தனியாக ஊறவைக்கவும். உளுந்தையும் வெந்தயத்தையும் ஒன்றாக ஊறவைக்கவும். உளுந்து 1/2 மணி நேரம் ஊற வைத்தால் போதும்.
4-5 மணி நேரத்துக்குப் பிறகு அரிசியையும் அவலையும் சேர்த்து சற்று கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.இல்லையென்றால் இட்லி மொழு மொழுவென்று இருக்கும்.அடுத்து உளுந்தையும் வெந்தயத்தையும் தண்ணீர் கொஞ்சம் கொஞ்சமாகச் சேர்த்து புசுபுசுவென்று வருமாறு அரைக்கவும்.
பிறகு அரிசி மாவையும் உளுந்து மாவையும் தேவையான அளவு உப்பு சேர்த்து ஒன்றாகக் கரைக்கவும்.7 முதல் 8 மணி நேரம் மாவைப் புளிக்க விடவும், அல்லது இரவு படுக்கும் முன் கரைத்து வைத்தால் காலை நன்றாகப் புளித்து மாவு பொங்கி இருக்கும்.
புளித்து தயாராக இருக்கும் மாவில் மிளகு, சீரகம், கருவேப்பிலை. சுக்குப்பொடி மற்றும் நல்லெண்ணெய் அல்லது நெய் சேர்த்து நன்றாக கலக்கவும்.2 மணி நேரம் கழித்து இட்லி தட்டில் மாவு சேர்த்து வேகவிடவும்.
காஞ்சிபுரம் இட்லி தயார்.
குறிப்பு :
இந்த மாவை சிறிய சிறிய டம்ளர்களிலும் ஊற்றி இட்லி பானையில் வைத்து வேகவைத்து எடுக்கலாம்.