சிறுதானிய தோசை மாவு செய்முறை
சிறுதானிய தோசை மாவு செய்ய தேவையான பொருட்கள்
தினை -1/2 கப் ,சாமை -1/2கப் ,குதிரைவாலி -1/2கப் ,வரகு -1/2கப் ,துவரம் பருப்பு -1கப், கடலை பருப்பு -1கப், உளுந்து -1ஸ்பூன்,பாசி பருப்பு -2ஸ்பூன்,வெங்காயம் -(2 பொடியாக நறுக்கியது),மிளகாய் வற்றல் -5,பச்சை மிளகாய் -2,இஞ்சி-1துண்டு ,சோம்பு -1/4 ஸ்பூன்,பெருங்காயம் -சிறிதளவு ,கொத்தமல்லி -சிறிதளவு ,கருவேப்பிலை -சிறிதளவு

சிறுதானிய தோசை மாவு செய்முறை
அரிசி வகைகளையும் பருப்பு வகைகளையும் கழுவிச் சுத்தம் செய்து ஒன்றாகச் சேர்த்து தண்ணீர் ஊற்றி 4 மணி நேரம் ஊறவைக்கவும். ஊறவைத்த அரிசி பருப்புகளுடன் சிகப்பு மிளகாய், பச்சை மிளகாய், இஞ்சி, சோம்பு தேவையான அளவு உப்பு சேர்த்து அரைக்கவும்,
பின் அரைத்த மாவுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம் பெருங்காயம் கொத்தமல்லி கருவேப்பிலை சேர்த்து நன்றாக கலக்கவும். அடுத்ததாக அடுப்பில் தோசைக்கல்லை வைத்துச் சூடானதும் மாவு வார்த்து சுற்றிலும் எண்ணெய் விட்டு இரண்டுபக்கமும் வேகவிட்டு எடுக்கவும்.
சுவையான சிறுதானிய அடை ரெடி.