சுவையான சமையல் குறிப்புகள் – எளிய மற்றும் வேகமான சமையல் டிப்ஸ்!

சமையல் குறிப்புகள்

  • பூரி கிழங்கு செய்யும் போது பொட்டுக்கடலையுடன் சோம்பு சேர்த்து அரைத்துக் கலந்தால் ருசியாக இருக்கும்.
  •  பாகற்காய் வறுவல் செய்யும் போது பாகற்காயை எண்ணெயில் பொரித்த பிறகு உப்பு, காரம் ஆகியவற்றை சேர்த்தால் மொறு மொறுப்பு குறையாது.
  •  நாட்டு சர்க்கரையை ஒரு உலர்ந்த பாட்டிலில் கொட்டி அதில் ஒரு ரொட்டி துண்டு போட்டு வைத்தால் சர்க்கரை நன்றாக உதிர்ந்து உலர்ந்து விடும்.
  •  வெங்காய பஜ்ஜி செய்யும் போது சிறிதளவு வெங்காயத்தை வதக்கி விட்டு பிறகு பஜ்ஜி செய்தால் வெங்காயம் வட்ட வட்டமாக பிரிந்து வராது.
  •  பிரியாணி இலையை பிரியாணியில் போடும்பொழுது முழு இலை அல்லது பாதி இலையாக உடைத்துப் போட வேண்டும். சிறு சிறு துண்டுகளாக உடைத்துப் போட்டால் சாப்பிடும் போது தொண்டையில் மாட்டிக்கொள்ளும்.
  •  சப்பாத்தி மாவு இரண்டு கிண்ணம், ஒரு வாழைப்பழம், அரை கப் தயிர், தேவைக்கேற்ற உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து பிசைந்தால் மிருதுவான சப்பாத்தி கிடைக்கும்.
  •  பொடி வகைகளில் உப்பு அதிகமாகி விட்டால் அதில் உள்ள பருப்பு எதுவோ அதை கொஞ்சம் வாணலியில் வறுத்து தனியாக பொடி செய்து நன்கு கலந்து விட்டால் உப்பு குறைந்து விடும்.
சமையல் குறிப்புகள்
  •  பூரிக்கு மாவு பிசையும் போது பிரட் துண்டுகளை நீரில் நனைத்து சேர்த்து பூரி செய்தால் மொறுமொறுவென இருக்கும்.
  •  மாவு சற்று புளித்தால் அதில் வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி நறுக்கி கடுகு போட்டு தாளித்து ஊத்தாப்பமாக ஊற்றி எடுக்கலாம், ருசியாக இருக்கும்.
  •  பொங்கல் செய்யும் போது தண்ணீர் அதிகமாகி விட்டதா? அத்துடன் சிறிது ரவையை வறுத்து கலந்து விட்டால் கெட்டியாகி விடும்.
  •  பெருங்காயம் கட்டியாகி இறுகி விட்டால் அதில் இரண்டு பச்சை மிளகாய் போட்டு வைத்தால் இளகிவிடும்.
  •  தோசை மாவு நீர்த்து இருந்தால் பாலில் இரண்டு ஸ்பூன் ரவை மற்றும் அரிசி மாவு சேர்த்து அதனுடன் கலந்து விட்டால் மேலும் நீர்த்துப் போகாது, புளிப்பும் தெரியாது.
  •  காய்கறிகளை வேகவைக்கும் போது அதனுடன் சிறிது தேங்காய் எண்ணெய் சேர்த்தால் காய்கறிகள் எளிதில் வெந்துவிடும்.
  •  மீதமான தேங்காய் சட்னியை கெட்டியான புளிப்பு மோரில் சேர்ந்து ஒரு கொதி விட்டால் சுவையான மோர் குழம்பு தயார்.
  •  கொள்ளு, காராமணி வேக வைத்த நீரை கீழே கொட்டாமல் சூப் செய்ய பயன்படுத்தலாம். சத்தாக இருக்கும்.
  •  வீட்டில் டீ தயாரிக்க நீரை கொதிக்க விடும்போது ஒரே ஒரு புதினா இலையும் போட்டு கொதிக்க விட்டு பாருங்கள். டீயின் மனமும் ருசியும் அபாரமாக இருக்கும்.
  •  ரசம் தயாரிக்கும் போது சுண்டக்காய் அளவு இஞ்சி சேருங்கள், சூப்பராக ரசம் இருக்கும்.
  •  இட்லிக்கு மாவாட்டும் போது ஒரே ஒரு ஆமணக்கு விதையை தோல் நீக்கி போட்டுப் பாருங்கள் இட்லி மெது மெது என்று இருக்கும்.
  • காட்டு நெல்லிக்காயை கழுவி கொதிக்க வைத்த நீரில் போட்டு சிறிது உப்பு போட்டு மூடி வையுங்கள், வைட்டமின் குறையாத ஊறுகாய் ரெடி. தேவை பட்டால் மிளகாய் பொடியும் போட்டுக் கொள்ளலாம்.
  • அடைக்கு அரைக்கும் பொழுது மரவள்ளிக்கிழங்கை உரித்து சில துண்டுகள் சேர்த்து அரைக்கலாம், உருளைக்கிழங்கையும் துண்டுகளாக்கி போட்டு அரைக்கலாம். மொறுமொறுவென்று இருக்கும் அடை.
  • .மிஞ்சி விட்ட பழைய சோற்றை உப்பு போட்டு பிசைந்து நாலைந்து மிளகாய் கருவேப்பிலை ஆகியவற்றை பொடி செய்து போட்டு கலந்து சிறிய உருண்டைகளாய் உருட்டி வெயிலில் காயவைத்து விடுங்கள் சோற்று வடகம் ரெடி.
  • . பச்சை கொத்தமல்லி தழையை பச்சையாகவே, துவையல் அரைக்கும் போது போடுவதற்கு பதிலாக ஒரு துண்டு மாங்காயை போட்டு அரைத்தால் சுவையும் மனமும் அதிகமாகும்.
  •  மோர் குழம்பு வைக்கும் போது அரை நெல்லிக்காய் அரைத்துப் போட்டால் சுவை மிகுதியாக இருக்கும். 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top