துத்தி இலை
வேறு பெயர்கள் :கக்கடி (அல்லது ) வடபொறி
தாவரவியல் பெயர் : abutilon indicum(அபுடிலோன் இண்டிகம்)
மருத்துவ பயன்கள் :
இம் மூலிகையின் பெயர் “துத்தி” ஒன்பது வகை மூலத்திற்கும் கேட்கும். இந்த மூலிகையின் இலை ஒரு கைப்பிடி பறித்து பாலில் அரைத்து காலையும், மாலையும் சாப்பிட்டு வர ஒன்பது வகையான மூலமும் குணமாகும்.
- துத்தியை ஆமணக்கு எண்ணையில் வதக்கி சின்ன வெங்காயம் ஒரு பல் சேர்த்து கட்ட மூலரோகமும், கட்டி விரண முளைகளும், கிருமி விரணமும் போரும்.

- துத்திப் பூவால் ரத்த வாந்தியும், காசரோகமும் நீங்கும்.
- சுக்கில விருத்தியையும், தேகக் குளிர்ச்சியையும் உண்டாக்கும்.
- துத்தி விதையால் கால்களில் உண்டாகிய கருமேகமும், குஷ்டரோகமும் உட்சூடும் நீங்கும்.
- இம் மூலிகையில் “செம்பு சத்து, ஈயம்சத்து, உடப்பு சத்து” அதிகம் உள்ளது.