மணத்தக்காளி சூப்
தேவையான பொருட்கள்
மணத்தக்காளி கீரை – 1/2 கட்டு
சின்ன வெங்காயம் – 8
பூண்டு -3 பல்
தேங்காய் பால் – 1 கப்
உப்பு – தேவைக்கேற்ப
மிளகுத்தூள் – சிறிதளவு
எண்ணை – 1 டேபிள் ஸ்பூன்
செய்முறை
கீரையை ஆய்ந்து சுத்தம் செய்யுங்கள். வெங்காயம், பூண்டு தோலுரித்துப் பொடியாக நறுக்கவும்.
குக்கரில் எண்ணெயைக் காயவைத்து பூண்டு, வெங்காயம் சேர்த்து சிறிது வதக்கி, பிறகு கீரையையும் சேர்த்து மேலும் 2 நிமிடம் வதக்கி, 2 கப் தண்ணீர், உப்பு சோத்து குக்கரை மூடி ஒரு விசில் வந்ததும் இறக்கவும்.
ஒரு நிமிடம் கழித்து, ‘வெயிட்’டைத் தூக்கி, பிரஷரை வெளியேற்றிவிட்டு குக்கரைத் திறந்து மிளகுத்தூள், தேங்காய்ப் பால் சேர்த்துக் கலந்து பரிமாறவும்.(விருப்பப்பட்டவர்கள் வெங்காயம் வதக்கும்போது, ஒரு தக்காளியைச் சேர்த்துக் கொள்ளலாம்.)
பயன்கள்
வயிற்று உப்புசத்திற்கு இது சிறந்த மருந்து. இந்நோயால் அவதிப்படுபவர்களுக்கு இந்த சூப்பை ஆறிய பிறகு கொடுக்க பலன் கிடைக்கும். வயிற்றுப்புண்ணுக்கும் நல்ல மருந்து இந்த சூப்