மாங்காய்
மாங்காயைப் பற்றிச் சித்தர்கள் குறிப்பிடும் போது இந்த மாங்காய், மனிதன் உபயோகிக்க கூடாத காய் என்று குறிப்பிடுகின்றனர்.
இந்த மாங்காயினால் மனித குலத்திற்கு நன்மை எதுவும் இல்லை. மாறாகத் தீமைகளே அதிகம்.
என்னென்ன தீமை தெரியுமா?
- உடல் வலுமிக்க ஆண்மகன் ஒருவன் இந்தமாங்காயை விரும்பி உண்டு வந்தால் அது அவனுடைய ஆண்மையை நாசம் செய்கிறது. அவன் விரும்பியபடி தன் மனைவியுடன் சேர முடியாமல் சீக்கிரமே அவன் மேல் அவளுக்கு வெறுப்புண்டாகும்படி வழி செய்கிறது.
- அவனுடைய இந்திரியத்தை அது நாச மாக்கி உயிரணுக்களைக் கொன்று போடுகின்றது.
- வாத நோய்களை சிருஷ்டி செய்கிறது.

- வாயு சம்பந்தப்பட்ட நோய்களை உண்டாக்கி உடலில் பெரும் வாயுவைக் கிளறிவிடுகிறது.
- உடலில் பற்பல விதமான சிரங்குகளை உற்பத்திச் செய்கிறது. இந்தச் சிரங்குகள் ஆறாத ரணங்களாக மாறிவிடும்.
- தோலின் மேல் வெடிப்புகள் உண்டாகின்றன.
- அங்கங்கே புண்கள் தோன்றி மருந்துகளால் ஆற்ற முடியாதபடி மிக நீண்ட நாட்கள் நம் உடலில் வாழும்படி செய்ய வல்லமை பெற்றது இம் மாங்காய் என்றால் அதில் ஆச்சரியப்படத்தக்க விஷயம் ஒன்றுமில்லை.
- பற்கள் மிகவும் கூசி வலுவிழந்து போகின்றன.
- பேசும் போது நாக்குக் குழறி சொற்களானது ஒழுங்காக வராமல் திணறுகிறது.
இதனையே
தாதுநஷ்டம் வாதந் தனிக்கிரந்திபாம்பு போல்
காதுமுட்டப் பக்குவிடுங் காயமதி லோதுகின்ற
பாங்காயாப் புண்வளரும் பற்கூசுஞ் சொற்குாறு
மாங்கா பிண்பாரை மதி” – என்று பழம் பாடல் குறிப்பிடுகின்றது.

இவ்வளவுக்கும் மேலே
மனிதனின் வயிற்றில் உள்ள உணவைச் செரிக்கின்ற தன்மையைக் குறைத்து பசி எடுக்காமல் செய்து ஒருமந்த தன்மையை இது வளர்க்கிறது!
இப்படிப்பட்ட மாங்காயை நீக்க வேண்டுமா? வேண்டாமா?