அக்கரகாரம்
வேறு பெயர்கள் : அக்கிராகரம் ,அக்கரம்
Botanical Name : Anacyclus Pyrethrum
சுவை : கார்ப்பு
தன்மை : வெப்பம்
செய்கை : வெப்பம் உண்டாக்கும், உமிழ்நீர் பெருகும், தடிப்பு உண்டாக்கும்.
குணம் : இதனால் வாத தோடமும், நீர் வேட்கையும் நீங்கும். இதை வாயில் அடக்கிக் கொள்ள நாவறட்சி நீங்கி நாக்கில் நீர் ஊறும்.

அக்கர காரம் அதன்பேர் உரைத்தக் கால்
உக்கிரகால் அத்தோடம் ஓடுங்காண் -முக்கியமாய்க்
கொண்டால் சலம் ஊரும் கொம்பனையே!தாகசுரம்
கண்டால் பயந்தோடுங் காண்
பல்வலி ,உள்நாக்கு வளர்ச்சி, தொண்டை கம்மல், நா அசைவற்றுப் போகுதல், கீல் வாயு, முப்பிணி – சந்நி தோடம் இவைகளும் நீங்கும்.
பல்வலி, உள்நாக்கு வளர்ச்சி, தொண்டை கம்மல், நா அசைவற்று போதல், காய்ச்சலினால் உண்டாகும் வறட்சி ஆகிய இவைகள் ஒரு சிறிய அக்கரகாரதுண்டை வாயிலிட்டு மென்று வருவதாலும், அக்கிரகாரத்தை ஊறல் நீர் செய்து வாய் கொப்பளித்து வருவதாலும் நீங்கும்.
இதன் தனித்தூளை மூக்கிலிட காக்கை வலி நீங்கும்
அக்கரகாரம், சுக்கு, திப்பிலி, செஞ்சந்தனம், கிராம்பு, சாதிக்காய், குங்குமப்பூ இவைகளின் பொடி வகைக்கு 50கிராம் அதன் பின் 100 கிராம், சர்க்கரை ஒரு கிலோ இவற்றை ஒன்றாக கலந்து அதில் 2 கிராம் எடை காலை, மாலை உட்கொள்ள வயிறு நோய்கள், நரம்புத் தளர்ச்சி நீங்கும்.