பிரபல நடிகைக்கு வந்த சோதனை ? கண்ணீர் விட்டு அழுத்த பரிதாபம்

தமிழில் ஜெயம் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை சதா. தொடர்ந்து ஷங்கர் இயக்கத்தில் வெளியான அந்நியன், அஜித்துடன் திருப்பதி, வினய்யுடன் உன்னாலே உன்னாலே என பிசியான கதாநாயகியாக வலம் வந்த சதாவுக்கு ஒரு கட் டத்தில் பட வாய்ப்புகள் சரிவர அமையாததால், வடிவேலுவுக்கு ஜோடியாக எலி படத்தில் நடித்தார். ஆனால், அப்படம் படு தோல்வியை சந்தித்தது. அதன் பின்னர் பட வாய்ப்புகளே கிடைக்காத நிலையில், டச்லைட் படத்தில் விலைமாது கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை அதிர்ச்சியில் அழ்த்தினார்.

இந்நிலையில், ‘டார்ச்லைட்’ படத்திற்கு பிறகு படவாய்ப்புகள் அமைவது குதிரை கொம்பாகி போனதால் வெறுத்துப்போன சதா, நடிப்பில் இருந்து விலகி, மும்பையில் அந்தேரி லோகண்ட்வாலா இணைப்புச் சாலையில் எர்த்லிங்ஸ் கபே என்ற பெயரில் ஓட்டல் பிசினஸை தொடங்கினார்.

சதா

இந்நிலையில், லாபகரமாக சென்று கொண்டிருந்த அந்த ‘எர்த்லிங்ஸ் கபே”, ஓட்டலை அந்த இடத்தின் உரிமையாளர் உடனடியாக காலி செய்ய வேண்டும் என உத்தரவிட்ட நிலையில், வேறு வழியில்லாமல் இந்த மாதத்துடன் கடையை. மூடப் போகிறேன் என நடிகை சதா சமீபத்தில் ‘லைவ்’ வீடியோ ஒன்றில் கண்ணீருடன் கூறியுள்ளார். இதைப்பார்த்த நெட்டிசன்கள் பலரும், கடையை வேறு ஒரு இடத்திற்கு மாற்றுங்கள், நாங்கள் கண்டிப்பாக வந்து சாப்பிடுவோம். உங்கள் கபேவின் ருசி (வேறலெவல் என.ஆறுதல் கூறிவருகின்றனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top