சமந்தாவை பிரிந்தது ஏன் நாகை சைதன்யா விளக்கம்

வெங்கட் பிரபு இயக்கத்தில் தமிழ், தெலுங்கில் நாகை சைதன்யா, ப்ரீத்தி ஷெட்டி நடித்துள்ள கஸ்டடி படத்துக்கு இளையராஜா, யுவன் சங்கர் ராஜா இணைந்து இசையமைத்துள்ளனர். எஸ். ஆர். கதிர் ஒளிப்பதிவு செய்துள்ளார். வரும் 12ஆம் தேதி திரைக்கு வரவுள்ள இப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி ஹைதராபாத்தில் நடைபெற்றது. அப்போது சமந்தாவுடன் ஆன விவாகரத்து பற்றி நாகை சைதன்யா கூறியிருப்பதாவது.

நாகை சைதன்யா

நாங்கள் பிரிந்து வந்து இரண்டு வருடங்கள் ஆகிவிட்டது. முறைப்படி விவாகரத்து செய்து ஒரு வருடம் ஆகிவிட்டது. நாங்கள் இன்று அவரவருக்கான வாழ்க்கைக்கு நகர்ந்து சென்று விட்டோம். எங்களின் திருமண வாழ்க்கை மீது அதிக மரியாதை இருக்கிறது. சமந்தா இனிமையானவர். அவர் அனைத்து மகிழ்ச்சிக்கும் தகுதியான ஒருவர்.

சமூக வலைதளங்களில் வெளியான வதந்தி தான் பிரச்சனைக்கு காரணம். முதலில் அதை பெரிதாக கண்டுகொள்ளவில்லை, பிறகு அது கட்டுப்படுத்த முடியாத நிலைக்கு சென்றது. ஊடகங்கள் வதந்திகளை பரப்பும் போது அது இன்னும் அதிகமான குழப்பத்தை ஏற்படுத்துகிறது. பரஸ்பர மரியாதையை பறிக்கிறது. அதைத்தான் மோசமாக உணர்கிறேன். எங்கள் நலம்பிரும்பிகளுக்கு ஒன்று சொல்கிறேன் ஆழ்ந்த சிந்தனைக்குப் பிறகு நாங்கள் நிரந்தரமாக பிரிவது குடித்து முடிவு செய்தோம்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top