ஆம்பூர் மட்டன் பிரியாணி செய்முறை
ஆம்பூர் மட்டன் பிரியாணி செய்வதற்கு தேவையான பொருட்கள்
பாசுமதி அரிசி – 1கிலோ,மட்டன் – 1/2கிலோ,சின்ன வெங்காயம் – 1/2 கிலோ,தக்காளி – 1/2கிலோ,பழுத்த பச்சை மிளகாய் – 5,தயிர்- 1 கப்,கொத்தமல்லி தழை – 1/4 கப்,இஞ்சி பூண்டு விழுது – 2 ஸ்பூன்,புதினா – 1/4 கப்,பட்டை – 2,கிராம்பு – 2,பிரியாணி இலை – 2,லெமன் சாறு – 3 ஸ்பூன்,உப்பு – தேவையான அளவு,எண்ணெய் – தேவையான அளவு,நெய் – தேவையான அளவு

ஆம்பூர் மட்டன் பிரியாணி செய்முறை
ஆம்பூர் மட்டன் பிரியாணி செய்வதற்கு முதலில் ஒரு பாத்திரத்தில் அரிசியை போட்டு, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி ஊற வைத்துக்கொள்ள வேண்டும். அதன் பிறகு மற்றொரு பாத்திரத்தில் மட்டன் துண்டுகளைப் போட்டு தண்ணீர் ஊற்றி, நன்கு கழுவி தண்ணீரை வடிகட்டி விட வேண்டும்.
வெங்காயத்தை நீள நீளமாகவும், தக்காளியைப் பொடிப்பொடியாகவும் நறுக்கி வைத்துக்கொள்ள வேண்டும். ஒரு குக்கரை அடுப்பில் வைத்து சூடானதும், அதில் எண்ணெயை ஊற்றி, அதில் பட்டை, ஏலக்காய், கிராம்பு, பிரியாணி இலை போட்டு தாளித்து, அதனுடன் நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.

வெங்காயம் நன்கு வதங்கியதும், அதனுடன் இஞ்சி பூண்டு விழுது மற்றும் பழுத்த பச்சை மிளகாய் ஆகியவற்றை சேர்த்து வதக்க வேண்டும். அடுத்து தக்காளியை சேர்த்து வதக்க வேண்டும். பிறகு புதினா, தயிர், கொத்துமல்லித்தழை, தேவையான அளவு உப்பு, மட்டன் துண்டுகள் ஆகியவற்றை சேர்த்து நன்கு கிளறி, அடுப்பை சிம்மில் வைத்து மட்டனை கிரேவி பதம் வரும் வரை வேக விட வேண்டும்.
மட்டன் துண்டுகளுக்கு தகுந்தாற்போல் தண்ணீர் ஊற்றி ஒரு கொதி வந்ததும், அதில் அரிசியை போட்டு கொதிக்கவிட்டு கடைசியாக சிறிது நெய், எலுமிச்சை சாறு பிழிந்து, பிறகு நான்கு விசில் வந்தவுடன் இறக்கி, சாதத்தை லேசாக மேலிருந்து கீழாக சாதம் குழையாமல் கிளறினால் சுவையான ஆம்பூர் மட்டன் பிரியாணி ரெடி.