மறைந்தார் கேப்டன்.விஜயகாந்த் !!!!சோகத்தில் மூழ்கியது தமிழகம்

பிரபல நடிகரும் தேமுதிக கட்சியின் தலைவரான திரு.விஜயகாந்த் உடல் நல கோளாறு காரணமாக அவர் உயிர் பிரிந்தது.கேப்டனுக்கு வயது 71, கடந்த சில வருடங்களாக சிறுநீரக மற்றும் தைராய்டு பிரச்சினை காரணமாக அவதிப்பட்டு வந்தார். சில காலம் அமெரிக்கா சென்று சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் அந்த சிகிச்சையும் பலன் அளிக்காமல் கேப்டன் உயிர் பிரிந்தது.

நாராயணன் விஜயராஜ் அழகர்சுவாமி (பிறப்பு 25 ஆகஸ்ட் 1952), அவரது மேடைப் பெயரான விஜயகாந்த் மூலம் நன்கு அறியப்பட்டவர், அரசியல்வாதி மற்றும் முன்னாள் நடிகர் ஆவார். 2011-ம் ஆண்டு முதல் 2016ம் ஆண்டு வரை தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவராக இருந்தவர்.அரசியலுக்கு வருவதற்கு முன்பு நடிகர், தயாரிப்பாளர், இயக்குனராக வெற்றி பெற்றவர் விஜயகாந்த்.

தேசிய முற்போக்கு திராவிட கழகம் (DMDK) அரசியல் கட்சியின் நிறுவனர் மற்றும் தலைவர், பொதுச் செயலாளர் மற்றும் முறையே விருத்தாசலம் மற்றும் ரிஷிவந்தியம் தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தி இரண்டு முறை சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றினார்.

விஜயகாந்த்

திரு.விஜயகாந்த் இதுவரை 156 படங்களில் நடித்து உள்ளார்.ரமணா, என் ஆசை மச்சான்,வானத்தை போல, வல்லரசு ,கேப்டன் பிரபாகரன் ஆகிய படங்கள் முக்கியமானவை.தமிழக மக்களால் கருப்பு எம்ஜிஆர் என்று அன்போடு அழைக்கப்பெற்றார்.

கேப்டன் 2 முறை MLA ஆகவும், ஒருமுறை எதிர்கட்சி தலைவராகவும் பதவி வகித்துள்ளார்.இவருக்கு பிரேமலதா என்கிற மனைவியும் , 2 மகன்களும் உள்ளனர்.

விஜயகாந்த்

கேப்டனின் மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் ,திரை துறையினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top