அடிக்கடி மாங்காய் சாப்பிடுவதால் உடலில் இவ்வளவு தீமைகள் ஏற்படுமா ?

மாங்காய்

மாங்காயைப் பற்றிச் சித்தர்கள் குறிப்பிடும் போது இந்த மாங்காய், மனிதன் உபயோகிக்க கூடாத காய் என்று குறிப்பிடுகின்றனர்.

இந்த மாங்காயினால் மனித குலத்திற்கு நன்மை எதுவும் இல்லை. மாறாகத் தீமைகளே அதிகம்.

என்னென்ன தீமை தெரியுமா?

  • உடல் வலுமிக்க ஆண்மகன் ஒருவன் இந்தமாங்காயை விரும்பி உண்டு வந்தால் அது அவனுடைய ஆண்மையை நாசம் செய்கிறது. அவன் விரும்பியபடி தன் மனைவியுடன் சேர முடியாமல் சீக்கிரமே அவன் மேல் அவளுக்கு வெறுப்புண்டாகும்படி வழி செய்கிறது.
  • அவனுடைய இந்திரியத்தை அது நாச மாக்கி உயிரணுக்களைக் கொன்று போடுகின்றது.
  • வாத நோய்களை சிருஷ்டி செய்கிறது.
மாங்காய்
  • வாயு சம்பந்தப்பட்ட நோய்களை உண்டாக்கி உடலில் பெரும் வாயுவைக் கிளறிவிடுகிறது.
  • உடலில் பற்பல விதமான சிரங்குகளை உற்பத்திச் செய்கிறது. இந்தச் சிரங்குகள் ஆறாத ரணங்களாக மாறிவிடும்.
  • தோலின் மேல் வெடிப்புகள் உண்டாகின்றன.
  • அங்கங்கே புண்கள் தோன்றி மருந்துகளால் ஆற்ற முடியாதபடி மிக நீண்ட நாட்கள் நம் உடலில் வாழும்படி செய்ய வல்லமை பெற்றது இம் மாங்காய் என்றால் அதில் ஆச்சரியப்படத்தக்க விஷயம் ஒன்றுமில்லை.
  • பற்கள் மிகவும் கூசி வலுவிழந்து போகின்றன.
  • பேசும் போது நாக்குக் குழறி சொற்களானது ஒழுங்காக வராமல் திணறுகிறது.

இதனையே

தாதுநஷ்டம் வாதந் தனிக்கிரந்திபாம்பு போல்
காதுமுட்டப் பக்குவிடுங் காயமதி லோதுகின்ற
பாங்காயாப் புண்வளரும் பற்கூசுஞ் சொற்குாறு

மாங்கா பிண்பாரை மதி” –
என்று பழம் பாடல் குறிப்பிடுகின்றது.

மாங்காய்

இவ்வளவுக்கும் மேலே

மனிதனின் வயிற்றில் உள்ள உணவைச் செரிக்கின்ற தன்மையைக் குறைத்து பசி எடுக்காமல் செய்து ஒருமந்த தன்மையை இது வளர்க்கிறது!

இப்படிப்பட்ட மாங்காயை நீக்க வேண்டுமா? வேண்டாமா?

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top