முருங்கைக்காய் சூப் : சிறுநீர்கற்கள்,பித்தபை கற்களை அகற்றி எலும்புக்கு வலு சேர்க்கும் அற்புத பானம்

முருங்கைக்காய் சூப்

தேவையான பொருட்கள்

  • முருங்கைக்காய் – 4
  • உருளைக்கிழங்கு -1
  • பெரிய வெங்காயம் – 1
  • மஞ்சள் தூள் – 1/4 ஸ்பூன்
  • எலுமிச்சை சாறு – 1 டேபிள் ஸ்பூன்
  • மல்லி தழை – சிறிதளவு
  • வெண்ணை – 1 டேபிள் ஸ்பூன்
  • உப்பு – தேவையான அளவு

அரைக்க

  • தனியா தூள் – 1 ஸ்பூன்
  • பூண்டு – 2 பல்
  • மிளகு தூள் – 1/2ஸ்பூன்

செய்முறை

உருளைக்கிழங்கைத் தோல் சீவவும். வெங்காயம்,முருங்கைக் காயைப் பெரிய துண்டுகளாக நறுக்கி, உருளைக்கிழங்குடன் சேர்த்து குக்கரில் 2 கப் தண்ணீர் சேர்த்து 3 விசில் வைத்தெடுக்கவும்.

முருங்கைக்காய் சூப்

உருளைக்கிழங்கு, வெங்காயத்தைத் தனியே எடுத்து அரைத்து, வேகவைத்த தண்ணீரில் முருங்கைக்காய் விழுது, உருளைக்கிழங்கு விழுது சேர்த்துக் கலக்கவும்.

அரைக்கக் கொடுத்துள்ள பொருட் களை ஒன்றாக நன்கு அரைத்துக்கொள்ளவும். வெண்ணெயை உருக்கி, அரைத்த விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்கி, உப்பு சேர்த்து நன்கு கொதித்ததும் இறக்கி எலுமிச்சம்பழச் சாறு, மல்லித் தழை சேர்த்துப் பரிமாறவும்.

பயன்கள்

  • எலும்புகளுக்கு பலன் அளிக்கும்
  • உடல் சுத்தியை ஏற்படுத்தும்
  • சிறுநீர் கற்கள்,பித்தப்பை கற்கள், மூத்திரப்பை கற்கள் உள்ளவர்கள் தொடர்ந்து பயன்படுத்த பலனளிக்கும்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top