கேழ்வரகு அடை| Ragi Adai | Finger Millet Adai
கேழ்வரகு அடை என்பது பாரம்பரிய இந்திய உணவுகளில் ஒன்றாகும். இது கேழ்வரகை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்படும் ஆரோக்கியமான மற்றும் சுவையான தோசை போன்ற உணவாகும். கேழ்வரகின் நார்ச்சத்து மற்றும் ஊட்டச்சத்து இவற்றின் மூலம் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். கேழ்வரகு அடையில் பச்சை மிளகாய், சின்ன வெங்காயம், கறிவேப்பிலை போன்றவற்றை சேர்ப்பதன் மூலம் அதன் சுவையை அதிகரிக்கலாம். இது காலை உணவாகவும், சிற்றுண்டியாகவும் சிறப்பாக செயல்படும். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்றது. விரைவாகவும் எளிதாகவும் தயாரிக்கக்கூடிய இந்த கேழ்வரகு அடை, உங்களின் தினசரி உணவில் ஆரோக்கியமான விருப்பமாக சேர்க்கப்படலாம்.
தேவையான பொருட்கள்
1.கேழ்வரகு-1/2கப்
2.பொரிகடலை-100கிராம்
3.முருங்கை கீரை-1கட்டு
4.தேங்காய் துருவல்-1கப்
5.பச்சை மிளகாய்-5
6.வெங்காயம்-150கிராம்
7.கேரட் துருவல்-150கிராம்
செய்முறை விளக்கம்
பொரிகடலையை மிக்ஸியில் பொடி செய்யவும். முருங்கைக் கீரையை சுத்தம் செய்து கழுவிய பின் கேரட் துருவல், பச்சை மிளகாய், சிறிதாக நறுக்கிய வெங்காயம், கேழ்வரகு மாவு, உப்பு சேர்த்து தண்ணீர் ஊற்றி கெட்டியாக பிசைந்து கொள்ளவும். பின் தோசை கல்லில் சின்ன சப்பாத்தி போல் தட்டி சிறிது எண்ணெய் ஊற்றி இரண்டு பக்கமும் திருப் போட்டு கருகாமல் எடுக்கவும்.
அடைக்கு புதினா, மல்லி, தேங்காய் வதக்கி மிளகாய், வெள்ளை பூண்டு சேர்த்து சிறிது புளியுடன் துவையல் செய்து சாப்பிட சுவை கூடும். கீரை சாப்பிடாத குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள்.

அடங்கியுள்ள ஊட்டச்சத்துக்கள்
1. கலோரி – 32.8
2. புரதச்சத்து – 7.3 கிராம்
3. கொழுப்புச்சத்து – 1.3 கிராம்
4.இரும்புச் சத்து – 3.9 மி.கிராம்.