‘கேப்டன் மில்லர்’ பொங்கல் விருந்தாக திரைக்கு வருகிறது. இதற்கிடையே அவர் இயக்கி வந்த ‘தனுஷ் 50’ படபிடிப்பு நிறைவு பெற்றிருக்கிறது. ராஜ்கிரன் அடித்த பா.பாண்டி படத்தை அடுத்து இப்போது தனது 50-வது படத்தை தனுஷே இயக்குகிறார். ‘திருச்சிற்றம்பலம்’ வெற்றி காரணமாக அதன் தயாரிப்பு நிறுவனமான ‘சன் பிக்சர்ஸ்’ கூட்டணியில் மீண்டும் இணைந்தார் தனுஷ்.

இது அவரது 50-து படம் என்பதால், அதனை தனுஷே இயக்க முடிவு எடுத்தார். இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா, சந்தீப் கிஷன்,அபர்ணா பாலமுரளி, ஜெயராம் துஷாரா,காளிதாஸ் என பலரும் நடிக்கின்றனர். இந்த கதை வட சென்னையின் கேங்ஸ்டர் கதை இது என்பதால் வடசென்னை ஏரியாவில் படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டனர்.
தனுஷ் நினைத்தது போல் கதைக்கான லொகேஷன் அமையாமல் போனது. அதனால் ஈ.சி.ஆர் சாலையில் அந்த தளத்தை உருவாக்கி படப்பிடிப்பு நடக்கிறது.