சிவப்பு அரிசியின் மருத்துவ பயன்கள் – உடல் ஆரோக்கியத்திற்கான சூப்பர் உணவு!

சிவப்பு அரிசி -மட்டை அரிசி

அரிசி மிக முக்கியமான தானியங்களில் ஒன்றாகும். வணிக ரீதியாக இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட நெல் வகைகள் உலகம் முழுவதும் பயிரிடப்பட்டு வருகின்றன. ஆசியாவில் வாழும் மூன்று பில்லியனுக்கும் அதிகமான மக்களின் முக்கிய உணவு அரிசி ஆகும். நமது பாரம்பரிய அரிசி வகையில் சிவப்பு அரிசி முக்கியமானது. இன்று பளபளக்கும், தீட்டப்பட்ட வெள்ளை அரிசியில் மயங்கி இருக்கும் நாம், நம் பாரம்பரிய அரிசியான சிவப்பு அரிசியை பெருமளவு பயன்படுத்துவதில்லை. குளியடிச்சன், குறுவைக்களஞ்சியம், நொறுங்கன், நூற்றிப்பத்து, சண்டிகார் ஆகியவை சிவப்பு அரிசி வகைகள் ஆகும். அவை தரும் நன்மைகள் குறித்து இதில் தெரிந்துகொள்வோம்.

பொதுவாக சர்க்கரை நோயாளிகள் அரிசி உணவை சாப்பிடவே கூடாது என்று சொல்வார்கள். ஆனால் சர்க்கரை நோயாளிகள் சிவப்பு அரிசியை எடுத்துக்கொள்ளலாம். இது உடலில் இருக்கும் நொதிகளுடன் இணைந்து செயலாற்றுகிறது. அதில் ஒன்று குளுக்கோஸ் மற்றும் இன்சுலின் சுரப்பு. இதில் இருக்கும் மெக்னீசியம் ஆனது இன்சுலின் சுரப்புக்கு உதவுகிறது. சிவப்பு அரிசி சாப்பிடுபவர்களுக்கு டைப் 2 நீரிழிவு அபாயத்தை குறைக்க உதவுகிறது. இதிலிருக்கும் குறைந்த கிளைசெமின் குறியீடு சர்க்கரை அளவை கட்டுப்படுத்தச் செய்வதால், இது சர்க்கரை நோயாளிகளுக்கு நன்மை தரக்கூடியது.

சிவப்பு அரிசி எடை இழப்பை ஊக்குவிக்கும் என்று சொல்லப்படுகிறது. இதில் உள்ள கொழுப்பு,பூஜ்ஜியம் அளவு என்பதால் இதன் நுகர்வு உடலில் எடையை அதிகரிக்க செய்யாது. அரிசியின் வெளிப்புற அடுக்கு அப்படியே பயன்படுத்தப்படுவதால் இது கரையக்கூடிய மற்றும் கரையாத நார்ச்சத்து இரண்டையும் கொண்டுள்ளது. உடலில் சேரும் உயர் கொழுப்புகளிலிருந்து விடுபட சிவப்பு அரிசியை பயன்படுத்துவது நல்லது.

அன்றாடம் உடல் வேலை செய்ய தேவையான ஆற்றலை இது வழங்குகிறது. இது நார்ச்சத்து கொண்டிருப்பதால் மலச்சிக்கல் இல்லாமல் வைத்துக்கொள்ளும். இதன் சத்துக்கள் அனைத்தும் மாவுப்பொருள்களாக உடலில் சென்று சேமிக்கப்படுகிறது. சிவப்பு அரிசி செரிமானத்தன்மையை மேம்படுத்தகூடியது. இது குடல் உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி இயக்கங்களை எளிதாக்குகிறது. இதனால்
மலச்சிக்கல் பிரச்சனை வருவதற்கான வாய்ப்புகள் இல்லை. மாதவிடாய் சுழற்சி முடியும் நிலையில் இருக்கும் பெண்களுக்கு அதன் அறிகுறிகள் மிதமாகவோ தீவிரமாகவோ இருக்கும்.

இந்நிலையில் அதிக கொழுப்பு, உயர் ரத்த அழுத்தம், இதய நோய் போன்றவை வருவதற்கான வாய்ப்புகள் உண்டு. ஆனால் சிவப்பு அரிசி பயன்படுத்துவதன் மூலம் இதிலிருந்து விடுபடலாம். மேலும் மூட்டு வலி, முடக்குவாதம் வருவதற்கான வாய்ப்புகள் பெருமளவு தவிர்க்கப்படும். , பெண்களுக்கு இரும்புச்சத்து குறைபாடு, இரத்த சோகை பிரச்சனை, போன்றவைகளுக்கு தீர்வு அளிக்கக்கூடும் எலும்புகள் மற்றும் பற்களை பராமரிக்கவும் உதவுகிறது. இது கீழ்வாதம் மட்டும் ஆஸ்டியோபொராசிஸ் பிரச்சனைகளை தடுக்க செய்கிறது. சிவப்பு அரிசி நுரையீரலை பாதுகாக்கும் சத்துக்களை உள்ளடக்கியுள்ளது.

இதில் இருக்கும் மெக்னீசியம், ஆஸ்துமாவின் தீவிரத்தைக் கட்டுப்படுத்தும். மேலும் செலினியம் தொற்றுநோய்கள் உடலில் அண்டாமல் பாதுகாக்கச் செய்கிறது. மற்ற அரிசியில் இல்லாத அளவுக்கு இதில் வைட்டமின் பி1, பி3, பி6, இரும்புச்சத்து, மெக்னீசியம், துத்தநாகம், மாங்கனீசு, செலினியம், பாஸ்பரஸ் போன்ற கனிம சத்துக்கள் மிகுதியாகவே நிறைந்துள்ளது.

இதில் இருக்கும் ஆன்டிஆக்ஸிடண்ட் இதயத்துக்கு நன்மை செய்யக்கூடியது. சிவப்பு அரிசி உடல் ஆரோக்கியம் போன்று சருமத்துக்கும் அதிக நன்மைகளை செய்கிறது. இதனால் சருமம் வயதான தோற்றத்தை தள்ளிப்போகச் செய்கிறது.

கேரளாவின் பிரபலமான நவரா அரிசி பரவலாக ஆயுர்வேத நடைமுறையில் நச்சுக்களை விலக்கவும், முன்கூட்டியே வரும் முதுமையை தாமதப்படுத்தவும், ஒரு உடல் சரிவூட்டும் பொருளாக பயன்படுத்தப்படுகிறது. வண்ண அரிசியில் ( கருப்பு மற்றும் சிவப்பு ) தாது உப்புக்கள் (இரும்பு மற்றும் துத்தநாகம்) மற்றும் பாலிபீனால்கள் நிறைந்துள்ளது. மற்றும் ஆன்டிஆக்ஸிடென்ட் பண்புகளை கொண்டுள்ளது.

இந்தியாவின் சில பகுதிகளில் சிவப்பு அரிசி மிகவும் ஊட்டச்சத்து மிக்கதாகவும் மருத்துவ குணம் கொண்டதாகவும் கருதப்படுகிறது. ரொட்டி மற்றும் சப்பாத்தி தயாரிப்பதற்கு சிவப்பு அரிசி விரும்பப்படுகிறது. தென்னிந்தியாவில் புட்டு தயாரிக்க பயன்படுத்தப்படுகிறது.

இமாச்சலப் பிரதேச ஜட்டு சிவப்பு அரிசி மணம் மற்றும் சுவை மிகுந்தது. இமாச்சலப் பிரதேசத்தின் மாதலி மற்றும் லால் சிவப்பு அரிசி ரத்த அழுத்தம் மற்றும் காய்ச்சலை குணப்படுத்த பயன்படுத்தப்படுகிறது. கர்நாடகாவின் கரி காக்கா மற்றும் அதிகாரிய சிவப்பு அரிசி குளிர்ச்சிடானிக்காக பயன்படுத்தப்படுகிறது. நீலம் சம்பா தமிழ்நாட்டில் பாலூட்டும் தாய்மார்களுக்கு பயன்படுத்தப்படுகிறது.

கருங்குருவை யானைக்கால் நோய் குணப்படுத்தவும், கருங்குருவி அரிசியை பசும்பால் மற்றும் தேனுடன் சேர்த்து கொதிக்க வைத்து லேகியமாக பயன்படுத்தலாம். முளைவிட்ட பழுப்பு அரிசியின் வழக்கமான உட்கொள்ளல் உடல்நலத்திற்கு நல்லது.

எடுத்துக்காட்டாக: தலைவலி, பெருங்குடல் புற்றுநோய், இதய நோய் மற்றும் அல்சைமர் நோய்களை தடுக்கவும், ரத்த அழுத்தத்தை குறைக்கவும், இரத்த சர்க்கரை அளவை ஒழுங்குபடுத்தவும் இது உதவும்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top