இட்லி பொடி
தேவையான பொருட்கள்
1.காய்ந்த மிளகாய் – 100 கிராம்.
2.உளுத்தம்பருப்பு -1 கப்
3.கடலைப்பருப்பு -1 கப்
4.எள் – 50 கிராம்
5.பெருங்காயத்தூள் – சிறிதளவு
6.எண்ணெய் – 2 டீஸ்பூன்
7.உப்பு – தேவையான அளவு.

செய்முறை:
வெறும் வாணலியில் கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு ,எள் மூன்றையும் தனித்தனியாக வறுத்துக்கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்த மிளகாயை வறுத்துக்கொள்ளவும்.
முதலில் கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பை மிக்ஸியில் ரவை பதத்துக்கு அரைத்து, எள் சேர்த்து பொடித்து எடுக்கவும் அதனுடன் காய்ந்த மிளகாய், உப்பு சேர்த்து அரைத்து எடுத்து, பெருங்காயத்தூள் சேர்த்து நன்கு கலக்கவும்.
இப்போது சுவையான ஐயர் வீட்டு இட்லி பொடி தயார்.இட்லி மற்றும் தோசைக்கு பயன்படுத்தலாம் மிக சுவையாக இருக்கும்.