ஜெயிலர்
தரமணி, ராக்கி படங்களின் கதாநாயகனாக நடித்துபிரபலமானவர் வசந்த் ரவி. இவர் தற்போது நெல்சன் இயக்கத்தில் தயாராகும் ஜெயிலர் படத்தில் ரஜினிகாந்த் உடன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். மேலும் சில படங்கள் கைவசம் உள்ளன.
இது குறித்து வசந்த் ரவி கூறும் போது ராம் இயக்கத்தில் நடித்த தரமணி, அருண் மாதேஸ்வரன் இயக்கிய ராக்கி ஆகிய படங்களில் சீரியஸ் கதாபாத்திரங்களில் நடித்தேன். இந்த படங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. தற்போது ரஜினிகாந்தின் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறேன். நெல்சன் திலீப் குமார் என்னை அழைத்து ரஜினியுடன் நடிக்கும் வாய்ப்பை வழங்கினார். இந்த படத்தில் நடிப்பதை வாழ்நாளில் மறக்க முடியாது என்று கூறினார்.


மேலும் சத்தியராஜ், ராஜூமேனன் ஆகியோருடன் இணைந்து வெப்பன் என்ற படத்தில் நடிக்கிறேன். இதில் எனக்கு தான்யா ஹோப் ஜோடியாக வருகிறார். ஐஸ்வர்யா ராஜேஷ் உடன் இணைந்தும் புதிய படம் ஒன்றில் நடிக்கிறேன். அதோடு கண்ட நாள் முதல் படத்தின் இயக்குனர் பிரியா இயக்கும் படத்திலும், அஸ்வின் என்ற திரில்லர் படத்திலும் நடிக்கிறேன். பிற மொழிகளில் நடிக்க வாய்ப்புகள் வருகின்றன என்று கூறினார்.