நெல்சன் இயக்கத்தில் நயன்தாராவின் நடிப்பில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற திரைப்படம் ‘கோலமாவு கோகிலா’. நயன்தாரா திரையுலகில் மீண்டும் ஒரு ரவுண்டு வர முக்கிய காரணம். நெல்சனுக்கும் இப்படம் விஜய் ரஜினி என உச்ச நடிகர்களை இயக்க காரணமாகவும் அமைந்தது.
மீண்டும் நெல்சன் நயன்தாரா கூட்டணி இணைய உள்ளது.தங்களது திரையுலக வாழ்க்கையின் திருப்புமுனையாக அமைந்த கோலமாவு கோகிலா படத்தின் இரண்டாம் பாகத்துக்காக இக்கூட்டணி இணைகிறது என்கிறார்கள்.இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என தெரிகிறது.