சுவையான பருப்பு பொடி செய்வது எப்படி ?

பருப்பு பொடி

தேவையானவை

1.துவரம் பருப்பு – ஒரு கப்

2.மிளகாய் வற்றல்-10

3.மிளகு – ஒரு டீஸ்பூன்

4.உப்பு – தேவையான அளவு.

செய்முறை

முதலில் உப்பை வாணலில் வறுக்கவும். பிறகு மிளகு, மிளகாய் வற்றல், துவரம் பருப்பு என ஒவ்வொன்றாக தனித்தனியே வறுக்கவும். மிக்சியில் நன்றாக ‘நைசாக’ அரைக்கவும். வீட்டில் அரைத்தால் நன்கு சலித்துவிட்டு மறுபடி அரைக்க வேண்டும். இதற்கு தொட்டுக்கொள்ள வத்தக்குழம்பு சூப்பராக இருக்கும். ஆவக்காய் அருமையாக இருக்கும். சுடு சோற்றில் நிறைய நல்லெண்ணெய் விட்டு பருப்புப் பொடி போட்டு கலந்து சாப்பிடலாம். சோறு குழைந்திருந்தாலும் நன்றாக இருக்கும். உதிரியாய் இருந்தாலும், நன்றாக இருக்கும்.

குறிப்பு: வத்தக்குழம்பு சாப்பிடும்போது அதன்மேல் பருப்புப்பொடி தூவியும் சாப்பிடலாம்.

பருப்பு பொடி

மசாலா பருப்பு பொடி

தேவையானவை

1.துவரம்பருப்பு – ஒரு கப்

2.மிளகாய் வற்றல் – 10

3.மிளகு – ஒரு டீ ஸ்பூன்

4.பூண்டு – 10 பல்

5.உப்பு – சிறிதளவு.

செய்முறை

முதலில் உப்பை வறட்டு வாணலில் வறுக்கவும். பிறகு மிளகு, மிளகாய் வற்றல், துவரம்பருப்பு என ஒவ்வொன்றாக தனித்தனியாக வறுக்கவும். பூண்டு பற்களை உரித்து அப்படியே போட்டு அரைக்க வேண்டும்.

இதை மிக்சியில் ‘நைசாக’ அரைப்பது முக்கியம். இந்தப் பொடி கொஞ்சம் பூண்டு வாசத்துடன் நன்றாக இருக்கும். ஆனால் இதை ப்ரிட்ஜில் வைப்பது நல்லது,

வறட்டு தனியாப்பொடி

தேவையானவை

1.தனியா – ஒரு கப்

2.உளுத்தம் பருப்பு – 2 ஸ்பூன்

3.கடலைப் பருப்பு – 2 ஸ்பூன்

4.குண்டு மிளகாய் வற்றல் – 12

5.பெருங்காயம் – ஒரு சிட்டிகை

6.எண்ணெய் – சிறிதளவு

7.புளி – தேவையான அளவு

8.உப்பு – தேவையான அளவு.

செய்முறை

தனியாவை ஜஸ்ட் எண்ணெய் தடவிய வாணலில் வறுக்கவும். அதேசமயம் கருகாமல் வறுக்க வேண்டும். புளியை சின்ன சின்ன துண்டுகளாக பிய்த்து நன்கு வறுக்கவும். மேலும் கரகரப்பாக வறுக்கவும். இப்போது எண்ணெய்விட்டு. மற்ற சாமான்களை வறுக்கவும்.

இவை ஆறிய பிறகு மிக்சியில் போட்டு உப்பு சேர்த்து அரைக்கவும். பின்பு அதை பாட்டிலில் போட்டு வைக்கவும். தேவை யானபோது சுடு சோற்றில் நெய் விட்டு இந்தப் பொடியைப் போட்டு பிசைந்து சாப்பிட்டால்,சோறு தானாக இறங்கும்.

குறிப்பு: இந்தப் பொடியை, வறுத்த காய் கறிகள் செய்யும்போது தூவலாம், பருப்பு சாம்பாரில் கடைசியில் கொஞ்சம் போட்டு இறக்கலாம். சுவை கூடும்.

பருப்பு பொடி

பூண்டுப் பொடி

தேவையானவை

1.பூண்டு – 10 பல்

2.பொட்டுக்கடலை – ஒரு டேபிள் ஸ்பூன்

3.வறுத்த வேர்க் கடலை – ஒரு டேபிள் ஸ்பூன்

4.மிளகாய்ப்பொடி – ஒரு டீஸ்பூன்

5.உப்பு – சிறிதளவு.

செய்முறை

எல்லாவற்றையும் மிக்சியில் போட்டு பொடிக்கவும். அரைக் கும்போதே வாசனை தூக்கலாக இருக்கும். சுடு சோற்றில் நெய் விட்டு இந்த பொடியைப்போட்டு பிசைந்து சாப்பிட்டால், சோறு அமிர்தமாக மாறும்.

குறிப்பு: எந்த காய்க்கும், குருமாவுக்கும் இந்தப் பொடியைப் போடலாம்.

கறிவேப்பிலை பருப்புப்பொடி

தேவையானவை

1.துவரம் பருப்பு – ஒரு கப்

2.மிளகாய் வற்றல் – 10

3.மிளகு – 1 டீஸ்பூன்.

4.கறிவேப்பிலை – 1 கொத்து

5.உப்பு – சிறிதளவு.

செய்முறை

பருப்புப்பொடி. பூண்டு பருப்புப் பொடி தயாரிப்பு போல, முதலில் உப்பை வறட்டு வாணலில் வறுக்க வும். பிறகு மிளகு, மிளகாய் வற்றல் துவரம்பருப்பு என ஒவ்வொன்றாக தனித்தனியாக வறுக்கவும்.

காய்ந்த கறிவேப்பிலையையும் அப்படியே போட்டு அரைக்க வேண்டும். மிக்சியில் ‘நைசாக அரைத் தால் நன்றாக இருக்கும். இதில் நிறம் கொஞ்சம் கம்மியாக இருக்கும். ஆனால் வாசனை தூக்க லாசு இருக்கும்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top