பருத்தி பால்
பருத்தி பால் செய்ய தேவையான பொருட்கள்
1.பச்சரிசி -100கிராம்
2.கருப்பு பருத்தி விதை -50கிராம்
3.தேங்காய் பெரிய மூடி -1
4.முந்திரி- சிறிதளவு
5.சுக்கு -சிறிதளவு
6.ஏலக்காய் -3
7.கருப்பட்டி -1 உருண்டை

பருத்தி பால் செய்முறை
பருத்தி விதையை தண்ணீரில் ஆறு மணி நேரம் ஊற வைக்க வேண்டும். பச்சரிசியை மிக்ஸியில் ரவை பதத்துக்கு போடித்துக் கொள்ளவும். ஊறிய பருத்தி விதையை தண்ணீர் விட்டு மிக்சியில் அரைத்து பால் எடுக்கவும். கருப்பட்டியை நன்றாக இடித்து அதில் தண்ணீரை விட்டு கரையும் வரை காய்ச்சி வடிகட்டி வைத்துக் கொள்ளவும்.
தேங்காய் முழுவதையும் துருவி அதில் முக்கால் பங்கு எடுத்து தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் அரைத்து பால் எடுக்கவும்.
அடி கனமான பாத்திரத்தில் ஆறு டம்ளர் தண்ணீரை கொதிக்க வைக்க வேண்டும். அதில் பிடித்து வைத்துள்ள அரிசியை போட்டு சிறிது நேரம் வேக விடவும். கொதி வந்தவுடன் தீயை குறைத்து பருத்திப் பால் ஊற்றி நன்றாக கொதிக்க விடவும். பருத்திப்பாலின் பச்சை வாசனை போனவுடன் கருப்பட்டி பாகை சேர்க்கவும். பின் சுக்கு, ஏலக்காய், மீதமுள்ள தேங்காய் துருவல், வறுத்த முந்திரி ஆகியவற்றை சேர்த்து கிளறவும். தேங்காய் பாலை கடைசியாக ஊற்ற வேண்டும். அதன் பிறகு கொதிக்க விட வேண்டாம்
பருத்தி பாலை பற்றிய சில துளிகள்
பருத்தி பாலுக்கு 2000 வருட பாரம்பரியம் உண்டு. “மதுரை காஞ்சி நூலின்” அரசர்களின் பிரதான பானமாக பருத்திப்பால் குறிப்பிடப்பட்டுள்ளது. அதுபோலவே சங்க இலக்கியங்களில் பருத்திக் கொட்டையை உணவாக பெண்கள் சேகரித்ததும் பருத்திக்கொட்டை கொக்கு போன்ற பறவைகள் உணவாக உட்கொள்வதையும் பல சங்க கால பாடல்கள் பதிவு செய்துள்ளன.
சிவகங்கை, தேனி, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் சாலையோர கடையை முதல் எல்லா இடங்களிலும் இந்த பருத்தி பால் கிடைக்கிறது. பாரம் எனப்படும் பருத்தி பூவை எடுத்து பின்னர் அதை மூட்டைகளில் கட்டி வீட்டுக்கு எடுத்துச் செல்வர் அதனால் ஏற்படும் நெஞ்சு வலிக்கு சிறந்த மருந்து பருத்திப்பால்.