கேழ்வரகு தோசை
தேவையான பொருட்கள்
1. கேழ்வரகு – 750 கிராம்
2. உளுந்து – 200 கிராம்
3. வெந்தயம் – 20கிராம்
4. உப்பு – தேவையான அளவு

செய்முறை
கேழ்வரகு மற்றும் உளுத்தம் பருப்பினை தனித்தனியே 2 முதல் 3 மணி நேரம் வரை ஊற வைத்துக் கொள்ளவும். ஊறிய பிறகு நன்கு அரைத்துக் கொள்ளவும்.
உப்பு சேர்த்து நன்கு கலக்கிக் கொள்ளவும். இரவு முழுவதும் புளிக்க வைத்தப் பிறகு இட்லித் தட்டில் மாவை ஊற்றி ஆவியில் வேக வைக்கவும். அல்லது தோசைகளாக வார்த்து எடுக்கவும்.