சிவகார்த்திகேயன் ட்விட்டரில் இருந்து தற்காலிகமாக விலகினார்!

சிவகார்த்திகேயன் தற்போது நடித்து வரும் மாவீரன் படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. வரும் ஆகஸ்ட் 11ம் தேதி வெளியாக உள்ள இப்படத்தை தொடர்ந்து,அவரது நடிப்பில் உருவாகியுள்ள அயலான் திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகவுள்ளது.

மாவீரன், அயலான் என அடுத்தடுத்து இரண்டு திரைப்படங்கள் வெளியாகவுள்ளதால், சிவகார்த்திகேயன்”ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில், சமூக வலைதளங்களிலும் மிகவும் ஆர்வம் காட்டி வரும் நடிகர் சிவகார்த்திகேயன் திடீரென டிவிட்டரில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

சிவகார்த்திகேயன்

இதுகுறித்து சிவகார்த்திகேயன் கூறியுள்ளதாவது.. “அன்பான சகோதரர்கள், * சகோதரிகளுக்கு… டிவிட்டரில் இருந்து சிறிது காலம் ஓய்வு பெறுகிறேன். விரைவில் திரும்பி வருவேன்…டேக் கேர்” என்று குறிப்பிட்டுள்ளவர்,

இனிமேல் என்னுடைய படங்களின் அப்டேட்களை எனது டீம் இங்கே ஷேர் செய்வார்கள் எனவும் கூறியுள்ளார்.

இயக்குனர் வெற்றிமாறன், லோகேஷ்கனகராஜ் ஆகியோர் திடீரென டிவிட்டரை விட்டு விலகியதை போல. தற்போது நடிகர் சிவகார்த்திகேயனும் விலகியுள்ளது அவரது ரசிகர்கள் மத்தியில்அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top