லியோ
விக்ரம் படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் ,விஜய் கேங்ஸ்டர் ஆக நடிக்கும் லியோ படத்தை இயக்கி வருகிறார். முதற்கட்ட படப்பிடிப்பு கடந்த இரண்டு மாதங்களாக காஷ்மீரில் நடந்து வந்த நிலையில் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு இப்படக்குழு சென்னை திரும்பியது. சென்னையில் சில காட்சிகள் படமாக்கப்பட்டு வந்த நிலையில், இதன் அடுத்த கட்ட படப்பிடிப்பு சென்னையில் வரும் மே மாதம் முதல் வாரம் தொடங்கும் என்றும் விஜய்,திரிஷா, சஞ்சய்தத் சம்பந்தப்பட்ட காட்சிகள் மட்டுமே படமாக்கப்பட உள்ளதாக சொல்லப்படுகிறது.

இரண்டு நாட்கள் மட்டுமே படப்பிடிப்பில் கலந்து கொண்ட சஞ்சய்தத் சென்னையில் ஒரு மாதம் தங்கி இருந்து நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சமீபத்தில் லியோ LCU படமா? என்ற கேள்விக்கு இப்படத்தின் நாயகி த்ரிஷா பதிலளிக்கையில் லியோ LCU படமா? இல்லையா? என்பது எனக்கு தெரியும். ஆனால் அதை நான் சொல்வதற்கு எனக்கு அனுமதி இல்லை.இந்தப் படத்தின் படப்பிடிப்பில் மே ஒன்றாம் தேதி முதல் நான் மீண்டும் கலந்து கொள்ள உள்ளேன். வரும் அக்டோபரில் இந்தப் படம் ரிலீஸ் ஆகும் போது ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஆச்சரியங்கள் காத்திருக்கும் என கூறியுள்ளார்.