தினை தோசை
தினை தோசை என்பது ஒரு மிகுந்த ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கியம் நிறைந்த தென் இந்திய உணவாகும். தினை மாவு, அரிசி மற்றும் உளுத்தம் பருப்பு ஆகியவற்றைக் கலந்து தயாரிக்கப்படும் இந்த தோசை, நொதித்தல் முறையில் செய்யப்படுகிறது. இது புரதம், நார்ச்சத்து, இரும்புச்சத்து மற்றும் கால்சியம் நிறைந்ததாகும், இது எடை குறைப்பு மற்றும் சர்க்கரை நோய் நிர்வாகத்திற்கு சிறந்தது. தினை தோசை பொதுவாக கிரீம் அல்லது சட்னி, சாம்பார் போன்ற பக்க உணவுகளுடன் பரிமாறப்படுகிறது. இது சுவையானது மட்டுமல்லாமல், செரிமானத்திற்கு ஏற்றதாகவும் உள்ளது. தினை தோசை ஒரு ஆரோக்கியமான தேர்வாகும், குறிப்பாக சிறுதானியங்களை உணவில் சேர்ப்பதை விரும்புவோருக்கு.
தேவையான பொருட்கள்
1.தினை அரிசி – 3கப்
2.உளுந்து -1 கப்
3.வெந்தயம் – ஸ்பூன்

செய்முறை:
தினை அரிசியை நன்கு கழுவி தனியாக ஊறவைக்கவும்.உளுந்தையும் வெந்தயத்தையும் ஒன்றாக ஊறவைக்கவும். 2 மணி நேரத்துக்குப் பிறகு அரிசியை கொரகொரவென அரைக்கவும்.
உளுந்தை கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து புசுபுசுவென அரைக்கவும்.
இரண்டு மாவையும் ஒன்றாக தேவையான அளவு உப்பு சேர்த்துக் கரைக்கவும். கரைத்த மாவை ஏழு மணி நேரம்வரை புளிக்க விடவும். அல்லது இரவு படுக்கும் முன் கரைத்து வைத்தால் காலையில் நன்றாகப் புளித்து மாவு பொங்கி இருக்கும்.
அடுப்பில் தோசைக் கல்லை வைத்துச் சூடானதும் மெல்லிய தோசைகளாக வார்த்து எடுக்கவும். சூடாகப் பரிமாறவும்.